
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் எடுக்கவே இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
India vs Sri Lanka: ஒரே ஆண்டில் 3ஆவது முறை 73, 50, 55 ஸ்கோர் - இலங்கையை துவம்சம் செய்யும் இந்தியா!
பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பதும் நிசாங்கா 0, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா 0, சரித் அசலங்கா 1, ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்கள் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
India vs Sri Lanka: 86 வயதில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்த தாத்தா!
இதையடுத்து களமிறங்கிய பின்வரிசை வீரர்களும் துஷான் ஹேமந்தா 0, துஷ்மந்தா சமீரா 0, கசுன் ரஜீதா 14, தில்ஷன் மதுஷங்கா 5 ரன்கள் என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். மஹீஷ் தீக்ஷனா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக இலங்கை 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது காலணி ஷூவை இளம் கிரிக்கெட் ரசிகருக்கு தனது கையால் பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.