தரையோடு அள்ளி ஏமாத்திய க்ரீன்: சுப்மன் கில்லிற்காக நடுவரிடம் வாக்குவாதம் செய்த ரோகித் சர்மா!

Published : Jun 10, 2023, 10:13 PM IST
தரையோடு அள்ளி ஏமாத்திய க்ரீன்: சுப்மன் கில்லிற்காக நடுவரிடம் வாக்குவாதம் செய்த ரோகித் சர்மா!

சுருக்கம்

சர்ச்சையான கேட்ச் மூலமாக சுப்மன் கில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா நடுவரிடம் விவாதம் செய்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியாவிற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

 

 

ஓபனராக 13,000 ரன்களை கடந்த 3ஆவது வீரரான ரோகித் சர்மா!

இதன் மூலமாக 444 ரன்கள் வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஸ்காட் போலண்ட் ஓவரில் சுப்மன் கில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பூஜ்ஜியம்: பாக், முன்னாள் வீரர் பாசித் அலி!

கொஞ்ச நேரம் அந்த கேட்ச்சை மூன்றாம் நடுவர்கள் டிவி ரீப்ளேயில் சரிபார்த்தனர். எனினும், கள நடுவர் அவுட் கொடுத்ததன் மூலமாக அவர்களும் அவுட் கொடுத்தனர். ஆனால், எப்படி அவுட் கொடுக்க போச்சு என்று கேப்டன் ரோகித் சர்மா கள நடுவரிடம் விவாதம் செய்தார். மேலும், சைகை மூலமாகவும் கேட்ச் பிடித்தது குறித்தும் முறையிட்டார்.

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ஆனால், கடைசியாக சுப்மன் கில் வெளியேறும் நிலைதான் வந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோளோடு வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் ஆட்டமிழந்தது ரோகித் சர்மாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. கிரிக்கெட் ரசிகர்களும் கேமரூன் க்ரீனை விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் பந்து வீச வரும் போதும் கூட ரசிகர்கள் சீட்டிங் சீட்டிங் என்று கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!