#IPL2021 இங்கிலாந்து வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப் கிங்ஸ்

By karthikeyan VFirst Published Aug 27, 2021, 3:34 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆட, இங்கிலாந்து அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள்  வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. சிஎஸ்கே அணி அமீரகம் சென்றுவிட்ட நிலையில், மற்ற அணிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றன.

சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்கள் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார்கள்.

எனவே அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் நேதன் எல்லிஸை அண்மையில் ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ரிலே மெரிடித்துக்கு மாற்று வீரராக எல்லிஸை ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத்தையும் அணியில் எடுத்துள்ளது. இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய ஜெய் ரிச்சர்ட்ஸனுக்கு மாற்று வீரராக அடில் ரஷீத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

லெஜண்ட் ரிஸ்ட் ஸ்பின்னரான அனில் கும்ப்ளேவின் பயிற்சியில் ஆடுவது அடில் ரஷீத்துக்கும் தனிப்பட்ட முறையில் அவரது வளர்ச்சிக்கு உதவும். கும்ப்ளேவின் பயிற்சியில் ரஷீத் ஆடுவது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெரிய பலமாக அமையும். 
 

click me!