இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் நடந்துவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் செம வியூவை ஃபோட்டோ எடுத்து டுவீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்து நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து, சில திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டிவிட்டு சென்றார்.
பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க அனுமதி கோரிய அச்சமூக மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அச்சமூக மக்களுக்கு மகிழ்ச்சியளித்தார். தனது உரையில், ஒளவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசினார்.
சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு கேரளாவிற்கு தனிவிமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்துவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை டாப் வியூவில் செமயாக ஒரு கிளிக் அடித்து அதை டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியா இங்கிலாந்து இடையேயான சுவாரஸ்யமான போட்டி என்று டுவீட் செய்துள்ளார்.
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi)