Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!

Published : Nov 11, 2023, 07:26 PM ISTUpdated : Nov 11, 2023, 07:41 PM IST
Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!

சுருக்கம்

இங்கிலாந்திற்கு எதிரான 44ஆவது லீக் போட்டியில் 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், அரையிறுதிக்கான 4ஆவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையவே அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

England vs Pakistan: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா? 6.4 ஓவர்களில் 337 ரன்கள் இலக்கு!

இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 44ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அதிரடியால் இங்கிலாந்து 337 ரன்கள் குவிப்பு!

இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்று இருந்தது. ஆனால், பாகிஸ்தான் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு நிதானமாக விளையாடத் தொடங்கியது. பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!

அதோடு பாகிஸ்தான் கடைசி அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ENG vs PAK: இங்கிலாந்து 300 எடுத்தால் பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் – இங்கிலாந்து பேட்டிங்!

நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..