பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!

Published : Nov 10, 2023, 05:40 PM ISTUpdated : Nov 10, 2023, 05:48 PM IST
பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!

சுருக்கம்

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதானது நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்தும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நியூசிலாந்து அணியானது 10 புள்ளிகள் பெற்றும், அரையிறுதிப் போட்டிக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 565 ரன்கள் குவித்துள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!

இந்த நிலையில் தான் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருது ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை செயல்பாடுகளின் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த மாதத்தில் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் வீசிய 383 பந்துகளில் 21 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.  மேலும், 383 பந்துகளில் 268 பந்துகளை டாட் பந்துகளாகவும் வீசியுள்ளார். இந்த நிலையில், தான் பந்துவீச்சாளர்களில் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 

South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

இதே போன்று பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவின் குயீண்டன் டி காக் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் டி காக் 6 போட்டிகளில் 3 சதம் உள்பட 431 ரன்கள் குவித்திருந்தார். ரச்சின் ரவீந்திரா 6 போட்டிகளில் 406 ரன்கள் குவித்து சில போட்டிகளில் நாட் அவுட்டாக இருந்ததால், அவரது சராசரி டி காக்கை விட அதிகமாக 81.20 ஆக இருந்துள்ளது. விக்கெட் மற்றும் எகானமியில் பும்ரா தான் முன்னணியில் இருந்தார். ஆனால், அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படவில்லை. அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்த ரச்சின் ரவீந்திராவிற்கு சிறந்த வீரர் வழங்கப்பட்டுள்ளது.

ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு – எல்லாம் தொலையட்டும் – ரவீந்திராவிற்கு திருஷ்டி சுத்திய பாட்டி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!