கடைசி ஓவரில் 1 விக்கெட், 4 ரன்களில் பரிதாபமாக வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ்: குவாலிஃபையர் 2ல் நெல்லை!

Published : Jul 08, 2023, 11:54 PM IST
கடைசி ஓவரில் 1 விக்கெட், 4 ரன்களில் பரிதாபமாக வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ்: குவாலிஃபையர் 2ல் நெல்லை!

சுருக்கம்

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்களில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்று எலிமினேட்டர் போட்டி நடந்தது. இதில், புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், 4ஆவது இடத்திலுள்ள சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்த்து. இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முடி திருத்தம் செய்யும் கடைக்கு சென்று காசு கொடுக்காமல் வந்த அலெக்ஸ் கேரிக்கு கெடு விதித்த கடைக்காரர்!

அதன்படி, நெல்லை அணியில் கேப்டன் அருண் கார்த்திக் 18 ரன்களில் வெளியேறினார். சூர்யபிரகாஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று நிதிஷ் ராஜகோபால் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

எந்த மைதானமாக இருந்தாலும் சரி, எந்த டீமாக இருந்தாலும் சரி எதற்கும் நாங்கள் ரெடி: பாக், கேப்டன் பாபர் அசாம்!

அடுத்து வந்த சோனு யாதவ், 17 ரன்கள் எடுக்க, விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்தது. பின்னர், 212 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி விளையாடியது.

பிறந்தநாள் கேக் வெட்டி செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த எம்.எஸ்.தோனி; வைரலாகும் வீடியோ!

தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 40 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஆதித்யா கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினார். அவர், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய ஸ்வப்னில் சிங் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மதுரை அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்களில் தோல்வி அடைந்து பரிதாபமாக டிஎன்பிஎல் தொடரிலிருந்து எலிமினேட்டாகியுள்ளது.

இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2ஆவது குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

பார்படாஸ் வீரர்களுக்கு பேட், ஷூ பரிசாக கொடுத்த முகமது சிராஜ்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?