IPL 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி..! ரசிகர்கள் செம குஷி

Published : Mar 21, 2022, 10:11 PM IST
IPL 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி..! ரசிகர்கள் செம குஷி

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகளை காண 25 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குவதால் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்த சீசனில் ஐபிஎல் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடத்தப்படவுள்ளது. மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டும்தான் ஐபிஎல் லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இதையும் படிங்க - IPL 2022: பயிற்சியில் ஸ்டம்ப்பை உடைத்தெறிந்த நடராஜன்..! வீடியோ

மும்பையில் வான்கடே ஸ்டேடியம், ப்ராபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.

ஐபிஎல் தொடரின் ஆரம்பக்கட்டத்தில் 25 சதவிகித பார்வையாளர்களையும், போகப்போக கூடுதல் பார்வையாளர்களையும் அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!