கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடும் முகமது ஷமி? பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டி?

Published : Mar 08, 2024, 02:08 PM IST
கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடும் முகமது ஷமி? பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டி?

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தது. இதையடுத்து அவர் 7 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனைகளை படைத்தார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் போட்டிகள் ஒரு அரையிறுதிப் போட்டி என்று எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் முகமது ஷமிக்கு சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முழு உடல் தகுதி பெறாத நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகினார். இதுவரையில் இந்த தொடரிலும் இடம் பெறாத ஷமி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் தான் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஷமியிடம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷமியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரப்பிரதேச மாநில ஆளும் பாஜக அரசு அடிக்கல் நாட்டியது.

ஷமி மற்றும் பாஜக இடையில் நல்லுறாவு இருக்கும் நிலையில், ஷமி மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா லவ் ஸ்டோரி.. தூது சென்ற சாரா.. சுவாரஸ்யமான பின்னணி!
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?