சேப்பாக்கிற்கு ஆட்டம் காட்டிய பாலசுப்பிரமணியம் – அரைசதம் விளாசி அசத்தல் – லைகா கோவை கிங்ஸ் 141 ரன்கள் குவிப்பு

Published : Jul 05, 2024, 09:09 PM ISTUpdated : Jul 05, 2024, 10:46 PM IST
சேப்பாக்கிற்கு ஆட்டம் காட்டிய பாலசுப்பிரமணியம் – அரைசதம் விளாசி அசத்தல் – லைகா கோவை கிங்ஸ் 141 ரன்கள் குவிப்பு

சுருக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.

தம்ழிநாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் லைகா சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் பாபா அபாரஜித் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி லைகா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், எஸ் சுஜய் மற்றும் ஜே சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழக்க, சுஜய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷாருக் கான் 8 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ரோகித், ஷிவம் துபே, யஷஸ்வி மற்றும் சூர்யகுமார் யாதவ்விற்கு ரூ.11 கோடி அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!

இவரைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சச்சின் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் சேர்த்தது. இதில் முகிலேஷ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ராம் அரவிந்த் களமிறங்கினார். ஆனால், அவர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஆதிக் ரஹ்மான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிரொலித்த ரோகித் சர்மா குரல் – சிரிப்பலையால் மூழ்கிய Assembly!

கடைசி வரை விளையாடிய பாலசுப்பிரமணியம் சச்சின் 53 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளும், கணேசன் பெரியசாமி மற்றும் டெரில் பெர்ராரியோ தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

கணபதி பாப்பா மோரியா – மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்த ரோகித், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?