அவங்க 2 பேரும் தான் எனக்கு புடிச்ச ஆல்ரவுண்டர்கள்.. பாண்டியாலாம் ஆல்ரவுண்டரே இல்ல..! கபில் தேவ் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 26, 2021, 9:17 PM IST
Highlights

கபில் தேவ் தனக்கு பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்கள்  யார் யார் என்று கூறியதுடன், ஹர்திக் பாண்டியா இப்போதைக்கு ஒரு ஆல்ரவுண்டரே கிடையாது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை. 

ஆல்ரவுண்டராக டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீசாதது விமர்சனங்களுக்கு வித்திட்டதையடுத்து, அடுத்த சில போட்டிகளில் ஒருசில ஓவர்கள் வீசினார். ஆனால் அவரால் முன்புபோல் பந்துவீசமுடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் முழு ஃபிட்னெஸை எட்டாததால், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமே இந்திய அணிக்கு தேவையே தவிர, ஒரு பேட்ஸ்மேனாக அல்ல. எனவே அவர் பந்துவீசினால் மட்டுமே இனிமேல் இந்திய அணியில் இடம்பெறமுடியும்.

இந்நிலையில், ஆரம்பத்தில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்ட ஹர்திக் பாண்டியாவை பற்றி இப்போது கபில் தேவ் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்.

இந்திய ஆல்ரவுண்டர்கள் குறித்து பேசிய கபில் தேவ், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தான் தனக்கு பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்கள் என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய கபில் தேவ், ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராக மதிப்பிட வேண்டுமென்றால், அவர் பேட்டிங்கும் ஆடவேண்டும்; பவுலிங்கும் செய்ய வேண்டும். அவர் பந்துவீசுவதே இல்லை.அப்படியிருக்கையில், அவரை எப்படி ஆல்ரவுண்டர் என்று சொல்லமுடியும்? அவர் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை அடைந்து பந்துவீசட்டும்; பின்னர் ஆல்ரவுண்டர் என்று கூறலாம் என்றார் கபில் தேவ்.
 

click me!