மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!

Published : Nov 01, 2023, 01:25 PM IST
மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!

சுருக்கம்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் கொண்டாட்டமான பட்டாசு வெடிக்கப்படாது என்று உறுதி செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நாளை பிற்பகல் மும்பையில் நடக்க இருக்கிறது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?

இந்த நிலையில் தான் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்கப்படாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதி செய்துள்ளார். மும்பையில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படாது என்று கூறியுள்ளது.

மும்பை வானகடே மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதையடுத்து வரும் 6ஆம் தேதி டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டி நடக்கிறது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இந்த நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மும்பை மற்றும் டெல்லியில் இனி வரும் போட்டிகளில் பட்டாசு வெடிக்கப்படாது என்று கூறியுள்ளார். காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வாழ்க்கையை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் சச்சினின் முழு உருவ சிலை இன்று திறப்பு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!