India vs England 2nd Test: 8ஆவது முறையாக காலி செய்த பும்ரா - கோபத்தில் கொந்தளித்த ரூட்!

Published : Feb 04, 2024, 10:56 AM IST
India vs England 2nd Test: 8ஆவது முறையாக காலி செய்த பும்ரா - கோபத்தில் கொந்தளித்த ரூட்!

சுருக்கம்

விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டி போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை 8ஆவது முறையாக ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.

Rohit Sharma: ஆண்டர்சன் வேகத்தில் ஸ்டெம்பை பறி கொடுத்த ரோகித் சர்மா, 3ஆவது நாளில் இந்தியா தடுமாற்றம்!

இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கிராவ்லி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆலி போப் மற்றும் ஜோ ரூட் கூட்டணி சேர்ந்து ரன்கள் குவித்தனர். ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்ற பும்ரா இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று மாறி மாறி வீசி திணற வைத்தார்.

2ஆவது குழந்தையை எதிர்பார்க்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, உண்மையை உடைத்த ஏபி டிவிலியர்ஸ்!

இதையடுத்து நேராக ஒரு பந்து வீச ஸ்லிப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் கையில் கேட்ச் கொடுத்து ஜோ ரூட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 8ஆவது முறையாக அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அதே போன்று ஆலி போப்பிற்கு யார்க்கர் பந்து வீச ஸ்டெம்ப் எகிறி கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடைசியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் குவித்தது.

இதில், பும்ரா 15.5 ஓவர்களில் 5 மெய்டன் உள்பட 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Jasprit Bumrah: பூம் பூம் பும்ராவிடம் சரண்டரான இங்கிலாந்து – முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்குள் சுருண்டது!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?