ஐபிஎல் 2020: தோனிக்கு பந்துவீசும் பவுலர்களே உஷார்.. ஓவர் பில்டப்புடன் கடுமையாக எச்சரிக்கும் இர்ஃபான் பதான்

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 9:09 PM IST
Highlights

தோனிக்கு ஐபிஎல்லில் பந்துவீசும் பவுலர்களுக்கு இர்ஃபான் பதான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர் ஓராண்டாக எந்த விதமான போட்டிகளிலும் ஆடாத நிலையில், அவரது ஓய்வு குறித்த ஓராண்டுகால விவாதத்திற்கு, ஓய்வு பெறுவதாக அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. 

தோனி ஐபிஎல்லில் ஆடுவார். சிஎஸ்கேவில் தோனி விரும்பும் வரை ஆடலாம். தோனி இந்திய அணியின் கேப்டனாக ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்திருப்பதை போலவே, சிஎஸ்கே அணிக்கு 3 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 

சிஎஸ்கே அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி. ஐபிஎல்லில் இதுவரை நடந்துள்ள 12 சீசன்களில் 2 சீசன்களை தவிர மற்ற 10 சீசன்களில் சிஎஸ்கே அணி ஆடியுள்ளது. தோனி தான் அந்த அணியின் நிரந்தர கேப்டன். தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி, ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றதுடன், 8 சீசன்களில் ஃபைனலுக்கு சென்று 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

தோனி ஐபிஎல்லில் 190 போட்டிகளில் ஆடி 4432 ரன்களை குவித்துள்ளார். அதிரடியாக ஆடி கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கும். சிஎஸ்கே அணியுடனான செண்டிமெண்ட், தோனியிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாமல் தவித்த பல சமயங்களில் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு வந்து கம்பேக் கொடுப்பார்.

அந்தவகையில், அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்த ஐபிஎல்லில் அவருக்கு பந்துவீசும் பவுலர்களை எச்சரித்துள்ளார் இர்ஃபான் பதான். 

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ள இர்ஃபான் பதான், ஐபிஎல்லில் தோனி ஆடுவதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். தோனிக்கு பந்துவீசும் பவுலர்கள் உஷார்.. அவர் ஃபுல் ஃப்ளோவில் ஆடவுள்ளார். அதனால் கவனமாக பந்துவீசவும் என்று இர்ஃபான் பதான் எச்சரித்துள்ளார்.
 

click me!