IND vs SL 3rd ODI: பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம்!

By Rsiva kumarFirst Published Jan 14, 2023, 5:00 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 3ஆவது மட்டும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியினர் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி கடந்த 12 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணியில் இந்தப் போட்டியில் அறிமுகமான நுவானிடு பெர்னாண்டோ 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணி சார்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

லலித் மோடிக்கு இரட்டை கொரோனா பாதிப்பு: விரைவில் குணமடைய ஹர்பஜன் சிங் வாழ்த்து!

இதையடுத்து 216 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணியில் கே எல் ராகுல் 64 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். ஹர்திக் பாண்டியா 36 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரை 2-1 என்ற கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

சேட்டக்கார பசங்களா இருக்காங்களே: ஆட்டம் ஓவராத்தான் இருக்கு: வைரலாகும் கோலி, இஷான் கிஷான் டான்ஸ் வீடியோ!

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அனைவரும் வெள்ளை நிற வேஷ்டியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவும் வைரலாகிவருகிறது.

அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலி, கே எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெறவில்லை. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் பீச்சில் தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஞ்சி டிராபி சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா!

 

Indian cricketer visited temple in Thiruvananthapuram pic.twitter.com/3CJW5X695z

— Pradeep Kumar 🇮🇳 (@pradeepkkuldeep)

 

♥️ pic.twitter.com/Varl9o8XqD

— Virat Kohli (@imVkohli)

 

click me!