IND vs ENG 2nd Test: ரஜத் படிதார், குல்தீப் யாதவ், முகேஷ் குமாருக்கு வாய்ப்பு – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

Published : Feb 02, 2024, 10:16 AM IST
IND vs ENG 2nd Test: ரஜத் படிதார், குல்தீப் யாதவ், முகேஷ் குமாருக்கு வாய்ப்பு – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஏற்கனவே விராட் கோலி 2ஆவது போட்டியில் இடம் பெறாத நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 2ஆவது போட்டியிலிருந்து விலகினார். இவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ரஜத் படிதார் சர்ஃபராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இன்றைய பிளேயிங் 11ல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக ரஜத் படிதார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார் மேலும், குல்தீப் யாதவ்வும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே போன்று இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் மற்றும் மார்க் வுட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சோயிப் பசீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகேஷ் குமார்

இங்கிலாந்து:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!