WTC Final: டேரெக்டாக களத்தில் இறங்க கூடாது, ஃபர்ஸ்ட் பிட்ச் கண்டிஷன் பாக்கனும் - அதுக்கு பயிற்சி போட்டி தேவை!

Published : Apr 28, 2023, 02:42 PM IST
WTC Final: டேரெக்டாக களத்தில் இறங்க கூடாது, ஃபர்ஸ்ட் பிட்ச் கண்டிஷன் பாக்கனும் - அதுக்கு பயிற்சி போட்டி தேவை!

சுருக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சி போட்டியில் இந்தியா விளையாட வாய்ப்பு உள்ளது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் பல சீனியர் வீரர்கள், டெஸ்ட்டில் இடம் பெறும் பிளேயிங் 11 குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

WTC Finalலில் அஸ்வின், ஜடேஜா இருக்கும் வரையில் கவலை இல்லை - சுனில் கவாஸ்கர்!

அந்த வகையில், சுனில் கவாஸ்கரும் பிளேயிங் 11 குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், முகமது ஷமி மற்று முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ரொம்ப பெரிய பிளான்லாம் போடல; சிம்பிள் பிளான் போட்டு சிஎஸ்கேவை காலி பண்ணிட்டோம் - சஞ்சு சாம்சன்!

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக கிளப் அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழல், மைதானம் குறித்து இந்திய வீரர்கள் அறிந்து கொள்ள முடியும். அதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம், பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதுவரையில் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பயிற்சி போட்டி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!