அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!

Published : Jun 25, 2023, 09:31 PM IST
அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

பா11சி திருச்சி அணிக்கு எதிரான 17ஆவது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இதே போன்று, பா11சி திருச்சி அணி விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆட்டம் கண்டுப்போன திண்டுக்கல் டிராகன்ஸ்: லைகா கோவை கிங்ஸ் நம்பர் 1 பிளேஸ்!

தற்போது பா11சி திருச்சி மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா 8 ரன்களில் வெளியேறினார்.

ஐபிஎல் பிளேயருன்னா சும்மாவா: தாறுமாறாக ஆடிய சாய் சுதர்சன்; லைகா கோவை கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு!

இவரைத் தொடர்ந்து வந்த ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதே போன்று பாலசந்தர் அனிருத் 25 பந்துகள் விளையாடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?