சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

Published : May 23, 2023, 02:14 PM IST
சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

சுருக்கம்

சென்னைக்கு எதிராக இன்று நடக்கும் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் கிஷோரை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 3 போட்டிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 16ஆவது சீசனும் முடியப் போகிறது. இந்த சீசனில் தற்போது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!

இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் சுற்று நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே போன்று வாய்ப்பு கொடுக்கும் போது சாய் சுதர்சனும் சிறாப்பாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வந்த மோகித் சர்மாவும் குஜராத் அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!

இன்று நடக்கும் போட்டியில் சேப்பாக்கத்தில் முதன் முறையாக களமிறங்கும் குஜராத், வெற்றி பெற வேண்டுமென்றால், சென்னையைப் போன்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும். ஏற்கனவே ரஷீத் கான் மற்றும் நூர் அஹமது குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இவர்களுடன் இணைந்து சாய் கிஷோரும் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இவர், சிஎஸ்கே அணியுடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார். இதனால், இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சாய் கிஷோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?