ரொம்ப தெனாவட்டா இருக்காம கொஞ்சம் அடங்கியே இருங்க.. இல்லைனா அன்னக்கி மாதிரியே பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும்!! இந்திய அணிக்கு கங்குலி எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 11:03 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். 

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியை முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, இந்திய அணி மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். களத்துக்குள் செல்லும்போதே நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் செல்லக்கூடாது. இந்த மனநிலையில் சென்றுதான் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் தோற்க நேரிட்டது என்று நினைக்கிறேன். எனவே அதீத நம்பிக்கையில் இருக்கக்கூடாது. இந்த போட்டி கண்டிப்பாக பிரமாதமான போட்டியாக இருக்கும் என்று கங்குலி தெரிவித்தார். 
 

click me!