இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?

Published : Jul 01, 2023, 10:01 AM IST
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?

சுருக்கம்

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக டிரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்ஸருக்கான டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணியின் ஜெர்சி ஸ்பானஸராக ஓப்போ, வீவோ உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்து வந்தன. அதன் பிறகு பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்து வந்தது. இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.5.5 கோடி வரையில் வருமானம் வந்தது. ஆனால், ஐசிசி தொடர்களில் வருமானம் என்னவோ ரூ.1.7 கோடியாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு இந்திய அணியின் ஜெர்சியில் ஸ்பான்ஸர்களி லோகோ இடம் பெறுவதில் பல விதிமுறைகள் உள்ளன.

ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

ஆதலால், வருமானம் குறைந்தது. எனினும் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் வரையில் இருந்தது. ஆனால், வருமானம் பாதிப்பு காரணமாக ஒப்பந்தத்தை மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டது. இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்சியில் ஸ்பான்ஸர் லோகோ இல்லாமல் களமிறங்கியது. மாறாக அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் முதல் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அடிடாஸ் நிறுவனத்தின் புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது.

Diamond League 2023: டைமண்ட் லீக் தடகள போட்டி! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா..!

இந்த நிலையில் தான் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிங் ஆப் செயலி நிறுவனமான டிரீம் லெவன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பிசிசிஐ முறையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- முதலைமைச்சர் கோப்பை அறிமுகம்: நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?