யாருப்பா இந்த சினே ராணா? டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

Published : Jul 01, 2024, 10:05 PM IST
யாருப்பா இந்த சினே ராணா? டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றி இந்திய மகளிர் வீராங்கனை சினே ராணா சாதனை படைத்துள்ளார்.

சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய சினே ராணா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்று அசத்தியுள்ளார்.

யார் இந்த சினே ராணா?

சினே ராணா ஒரு வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர். 30 வயதான அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 29 மற்றும் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் என்று மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக ஜூலான் கோஸ்வாமி 10 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 603 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பாலோ ஆன் கொடுத்து 2ஆவது இன்னிங்ஸையும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி விளையாடியது. இதில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 37 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!