MS Dhoni File Criminal Case: ஏமாற்றி ரூ.15 கோடி மோசடி – முன்னாள் தொழில் கூட்டாளிகள் மீது தோனி புகார்!

Published : Jan 05, 2024, 04:36 PM ISTUpdated : Jan 05, 2024, 04:59 PM IST
MS Dhoni File Criminal Case: ஏமாற்றி ரூ.15 கோடி மோசடி – முன்னாள் தொழில் கூட்டாளிகள் மீது தோனி புகார்!

சுருக்கம்

கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் 2 அதிகாரிகள் மீது தோனி தோனி ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இன்னும் 3 மாதங்களில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. இதற்காக தோனி தன்னை தயார் படுத்த இருக்கிறார். இதற்கிடையில் புத்தாண்டை துபாயில் சிறப்பாக கொண்டாடியிருக்கிறார். இந்த நிலையில் தான், கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

12 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி – 12 வயதா? 14 வயதா? வயதில் குளறுபடி!

ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே….சின்ன வயசுல விளையாடிய ரிங்கா ரிங்கா ரோசஸ் - வைரலாகும் வீடியோ!

ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. அவை மதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை இது குறித்து கேட்ட போதிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை திரும்பப் பெறத் தூண்டினார்.

விதி அசோசியேட்ஸ் மூலம் தோனியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயானந்த் சிங், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் ரூ.15 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது வெளியீடு தெரியுமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!