நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 11:08 AM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக டெல்லி கேபிடள்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிரடியாக விலகியுள்ளார்.
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட டைட்டில் வென்றிராத டெல்லி கேபிடள்ஸ் அணி, முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த சீசனில் பிளே ஆஃபில் தோற்று வெளியேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது. 

அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் படையை அருமையாக உருவாக்கியுள்ளார். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியை சரியான முறையில் வழிநடத்துகிறார் பாண்டிங். 

டெல்லி அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் என திறமையான இளம் வீரர்களை கொண்ட வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட டெல்லி அணி, ஏலத்திற்கு முன்பாக ரஹானே மற்றும் அஷ்வினை மற்ற அணிகளிடமிருந்து பெற்றது. 

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எடுக்கப்பட்டனர்.  

இந்நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது முடிவை டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஆடவுள்ளது. எனவே இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அந்த தொடருக்காக புத்துணர்ச்சியுடனும் உடற்தகுதியுடனும் இருப்பதற்காக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். 

Also Read - இவ்வளவு வெறித்தனமா ஒருத்தர் பேட்டிங் ஆடி பார்த்துருக்க மாட்டீங்க.. ஹர்திக் பாண்டியாவின் வெற லெவல் பேட்டிங்.. வீடியோ

குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் அதிக பணம் புழங்கும் ஐபிஎல் தொடரில் ஆடுவதற்குத்தான் அனைத்து வீரர்களும் விரும்புவார்கள். ஆனால் தனது தேசிய அணிக்கு ஆடுவதுதான் முக்கியம் என்று கூறி ஐபிஎல்லில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியிருக்கிறார். 

டெல்லி கேபிடள்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிச்சன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், 

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து பெற்ற வீரர்கள்:

ரஹானே, அஷ்வின்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:

ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ்(விலகியவர்), மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ். 
 

click me!