தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு – அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த பெட்டிஷனர்!

Published : Jan 19, 2024, 10:32 AM IST
தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு – அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த பெட்டிஷனர்!

சுருக்கம்

தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை முதலில் அவரிடம் தெரியப்படுத்துங்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. தொழில் கூட்டாளிகளான ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருடன் இணைந்து தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி தோனியின் பெயரில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.

ஜெர்மனி அணியிடம் ஷூட் அவுட்டில் இந்தியா தோல்வி – கட்டாய வெற்றியை நோக்கி ஜப்பானுடன் பலப்பரீட்சை!

இதில் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகிய இருவரும் பின்பற்றவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்படும் ஒப்பந்தத்திலிருந்து தான் பின் வாங்கிய நிலையிலும் கூட தனது பெயரில் தொடர்ந்து கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் ரூ.15 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

பேட்டிங்கில் கோல்டன் டக் – பீல்டிங்கில் கலக்கிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6ஆம் தேதி தோனியின் வழக்கறிஞர் அந்த 2 பேர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் தான் திவாகர் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இதனால் தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

டிராவில் முடிந்த முதல் சூப்பர் ஓவர் – 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

இந்த நிலையில் தான் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தோனிக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலில் இதனை தோனியிடம் தெரியப்படுத்துங்கள் என்று நீதிமன்ற சார் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரரான திவாகர் தோனி மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதில், தோனி தரப்பினர் தங்களது மீது பொய்யான புகார்களை கூறி வருவதாகவும், தங்களைப் பற்றி பேசக் கூடாது என்று தோனிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

த்ரில்லிங்கான கடைசி பந்து – டிராவில் முடிந்த 3ஆவது டி20 போட்டி – சூப்பர் ஓவர்!

மேலும், ஏற்கனவே எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பானச் செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன. அதனை நீக்க கூகுள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!