டெஸ்ட் தொடரில் கேமரூன் இடம் பெறுவார்: ஆண்ட்ரூ மெக் டொனால்டு திட்டவட்டம்!

Published : Jan 31, 2023, 06:46 PM IST
டெஸ்ட் தொடரில் கேமரூன் இடம் பெறுவார்: ஆண்ட்ரூ மெக் டொனால்டு திட்டவட்டம்!

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் இடம் பெறுவார் என்று பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியுள்ளார்.  

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடைசி நேரத்தில் நடந்த தவறு - லக்னோ பிட்ச்சை உருவாக்கும் அதிகாரி நீக்கம்!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது கேமரூன் க்ரீனுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் க்ரீன் இடம் பெற்றிருந்தார். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். மிர்டர் ஆர்டரில் நன்றாக ஆடக் கூடியவர். மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். ஆனால், 2ஆவது டெஸ்டில் அவர் களமிறங்குவார் என்று ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு தெரிவித்துள்ளார்.

நீயா? நானா? சவாலில் இந்தியா - நியூசிலாந்து: பிட்ச் யாருக்கு சாதகம்?

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது. ஆனால், அதன் பிறகு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!