Rishabh Pant: ரிஷப் பண்ட்டிற்கு கடைசி சான்ஸ் ஐபிஎல் தான், நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பையில் இடம்!

Published : Mar 12, 2024, 09:50 AM IST
Rishabh Pant: ரிஷப் பண்ட்டிற்கு கடைசி சான்ஸ் ஐபிஎல் தான், நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பையில் இடம்!

சுருக்கம்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் ரிஷப் பண்ட்டிற்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கிய நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக ஓய்வில் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதிக்கான கிளீரன்ஸ் சான்றிதழ் பெற இருக்கிறார். இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.

எனினும் அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடிய பிறகு தான் அவரது உடல்நிலையைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் உடல் தகுதியை அறிவிப்போம்.

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடினால், அது பெரிய விஷயமாக இருக்கும். இந்திய அணியின் சொத்து ரிஷப் பண்ட். அவர், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால், அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை உற்று நோக்குவோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் எப்படி அணியில் இடம் பெறுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..