England vs New Zealand: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் – ஜெய் ஷா அறிவிப்பு!

Published : Oct 05, 2023, 08:29 PM IST
England vs New Zealand: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் – ஜெய் ஷா அறிவிப்பு!

சுருக்கம்

உலகக் கோப்பை தொடரின் எல்லா போட்டிகளுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடு வருகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் குவித்தார். ஜோஸ் பட்லர் 43 ரன்கள் எடுத்தார்.

Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், தான் உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். முதல் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்திருந்தது. இதற்காகத்தான் முதல் போட்டியை அகமதாபாத் மைதானத்தில் வைத்தது.

CWC:உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை; 4,658 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை; 11 வீரர்கள் இரட்டை இலக்க ரன்கள்!

அதுவும் குஜராத், நரேந்திர மோடி மைதானம். ஆனால், மைதானம் முழுவதுமே காலி இருக்கைகள் தான். வெறிச்சோடி காணப்பட்ட நிலை தான் மிச்சம். எனினும், பிசிசிஐ சார்பில் 40000 ரசிகர்கள் முதல் போட்டியை காண வந்துள்ளார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். போட்டி தொடங்குவற்கு சில மணி நேரம் முன்பே ரசிகர்கள் வராத நிலையில் பிசிசிஐ இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது.

2023 உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்த ஜோ ரூட்; ஹென்றி வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து 281 ரன்கள் குவிப்பு!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?