கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!

Published : Nov 15, 2023, 07:41 PM ISTUpdated : Nov 15, 2023, 07:52 PM IST
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!

சுருக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதல் முறையாக இந்தியா வந்து விளையாடினார். பாகிஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

IND vs NZ 1st Semi Final:50 சதங்கள் – சச்சின் முன்னாடியே அவரது சாதனையை முறியடித்த சரித்திர நாயகன் விராட் கோலி

கடைசியாக கிடைத்த அரையிறுதி வாய்ப்பையும் இழந்த பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்த தருணம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், களத்திற்கு வெளியேயும், களத்திற்கு வெளியேயும் நான் பல உயர்வையும் தாழ்வையும் அனுபவித்துள்ளேன், ஆனால் பாகிஸ்தானின் பெருமையையும் மரியாதையையும் நிலைநிறுத்துவதை முழு மனதுடன் ஆர்வத்துடன் நோக்கமாகக் கொண்டிருந்தேன்.

India vs New Zealand: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஒயிட்-பால் வடிவத்தில் நம்பர் 1 இடத்தை அடைந்தது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும், இந்த பயணத்தின் போது அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

Shubman Gill Retired Hurt: காயம் காரணமாக ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறிய சுப்மன் கில்!

இன்று அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இந்த அழைப்பிற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். மூன்று வடிவங்களிலும் ஒரு வீரராக பாகிஸ்தானை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிக்க நான் இங்கு வந்துள்ளேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

IND vs NZ: உலகக் கோப்பையில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

பாகிஸ்தானின் தலைமையிடத்தில் நடத்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனினும், ஷான் மசூத் டெஸ்ட் போட்டி கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இருக்கு – பழி தீர்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பேட்டிங்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!