பொறுப்பாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ: 117 ரன்கள் எடுத்த திருச்சி!

Published : Jun 21, 2023, 10:42 PM IST
பொறுப்பாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ: 117 ரன்கள் எடுத்த திருச்சி!

சுருக்கம்

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி 117 ரன்கள் குவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 12 ஆவது போட்டியில் பா11சி திருச்சி அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பா11சி திருச்சி அணியின் கேப்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அக்‌ஷய ஸ்ரீநிவாசன், மணி பாரதி, பெர்ராரிரோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!

ஜாஃபர் ஜமால் 11 ரன்களில் வெளியேறினார். ராஜ்குமார் கடைசி நேரத்தில் கை கொடுக்க பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 118 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட லைகா கோவை கிங்ஸ் தற்போது விளையாடி வருகிறது. இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளிலும் பா11சி திருச்சி அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், லைகா கோவை கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்