Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

Published : Jun 07, 2023, 05:37 PM ISTUpdated : Jun 07, 2023, 05:38 PM IST
Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. இதில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.

லபுஷேன் கையை பதம் பார்த்த சிராஜ்: பேட்டை உதறிவிட்ட நடந்து சென்ற லபுஷேன்!

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து

ஒடிசா ரயில் விபத்து: ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்து, கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்து வருகினர். இதில், வார்னர் 60 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 43 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். இவரைத் தொடர்ந்து ஸ்டீவென் ஸ்மித் களமிறங்கினார்.

உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது. இதில் லபுஷேன் 26 ரன்னும், ஸ்மித் 2 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம்: மொத்தமாக இந்தியா 8 பதக்கம் வென்றுள்ளது!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?