அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்!

Published : Nov 10, 2023, 08:50 PM IST
அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் மட்டுமே எடுத்து அரையிறுதி வாய்ப்பை உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை ஓவர்டேக் செய்யும். இதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பு பெறும்.

Afghanistan vs South Africa: 3 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் குவிப்பு!

ஆனால், தற்போது நடந்து வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மதுல்லா உமர்சாய் மட்டுமே நிலையாக நின்று 97* ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும், உலகக் கோப்பை தொடரிலிருந்து 5ஆவது அணியாக வெளியேறியது.

பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விளையாடிய 9 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அதோடு, முதல் அணியாக உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. ஆனால், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதுவரையில் (தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு முன்னதாக) விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!

அரையிறுதி வாய்ப்பு கிடைத்தும் அதனை நழுவவிட்டு கடைசி வாய்ப்பையும் இழந்து பரிதாபமாக உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. ஆனாலும், இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தும் ஒரு கேட்சால் நழுவவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடக்க இருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை சேஸ் செய்தால், 50 ரன்கள் என்றால் 2 ஓவரிலும், 100 ரன்கள் என்றால் 3 ஓவரிலும் அடித்து வெற்றி பெற வேண்டும்.

South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!