#IPL2021 கேகேஆர் அணியின் ஆடும் லெவன்: 10 வீரர்கள் உறுதி.. அவங்க 3 பேரில் ஒருவர் 11வது வீரர்

By karthikeyan VFirst Published Apr 3, 2021, 5:51 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் 14வது சீசனுக்கான கேகேஆர் அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரே வாரம் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு அணிகளின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துவருகிறார். அந்தவகையில், கேகேஆர் அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் நிதிஷ் ராணா, 4ம் வரிசையில் கேப்டன் ஒயின் மோர்கன், 5ம் வரிசையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 6ம் வரிசையில் அதிரடி ஃபினிஷரும் ஆல்ரவுண்டருமான ஆண்ட்ரே ரசல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக ஆஸி., நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பாட் கம்மின்ஸ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவையும், ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவையும் தேர்வு செய்தார்.

10 வீரர்களை தேர்வு செய்துவிட்ட ஆகாஷ் சோப்ரா, பிட்ச் மற்றும் கண்டிஷன்களை பொறுத்து 11வது வீரராக ஃபெர்குசன், சுனில் நரைன் மற்றும் ஷகில் அல் ஹசன் ஆகிய மூவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் கேகேஆர் ஆடும் லெவன்:

ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ஃபெர்குசன்/சுனில் நரைன்/ஷகிப் அல் ஹசன்.
 

click me!