பொதுமக்கள் அதிர்ச்சி! புதுச்சேரியில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வாய்க்காலில் வாலிபர் சடலம்!

By vinoth kumarFirst Published Mar 28, 2024, 10:39 AM IST
Highlights

கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  சோலை நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (35) என்பது தெரியவந்தது. 

புதுச்சேரி 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்து வாய்க்காலில் வீசிய சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அதே வாய்க்காலில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகினார். இதனையத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க: ஃபாரினில் மலர்ந்த கள்ளக்காதல்.. சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை.. வெளியான பரபரப்பு தகவல்..!

இதனிடையே சோலைநகர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் சாக்கு மூட்டையில் சிறுமி இறந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து காமக்கொடூரர்களான விவேகானந்தன், கருணா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அதே வாய்க்காலில் வாலிபர் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  கொழுந்தியாளை பலாத்காரம் செய்த மாமா! வீடியோவை காட்டி மிரட்டி ஓயாமல் உல்லாசம்! அதிர்ச்சியில் காதல் மனைவி!

கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  சோலை நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (35) என்பது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான இவர் குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி ஞானபிரகாசம் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை யாராவது அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றனரா? குடிபோதையில் தவறி வாய்க்காலில் விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!