புதுச்சேரி சுற்றுலா சென்ற கோவை மாணவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழப்பு!!

Published : Oct 27, 2022, 03:35 PM IST
புதுச்சேரி சுற்றுலா சென்ற கோவை மாணவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழப்பு!!

சுருக்கம்

புதுச்சேரி அருகே ஆரோவில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது கடல் அலையில் சிக்கிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருந்து சுற்றுலா செல்வதற்காக 15 பேர் நேற்று முன் தினம் ரயில் மூலம் பாண்டிச்சேரி வந்துள்ளனர். பெரிய முதலியார் சாவடியில் உள்ள  தனியார் விடுதியில் தங்கினர்.  நேற்று நண்பகல் 1 மணியளவில் ஆரோவில் பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது மிதுன்(20) மற்றும் மகாவிஷ்ணு (20) ஆகியோர் கடலின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தின் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. 

இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கோட்டகுப்பம் காவல்துறையினர் மீனவர்களின் உதவியுடன் மிதுன் மற்றும் மகாவிஷ்ணுவின் சடலங்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் மீனவர்கள் தேடுதலின்போது மாணவர்களின் சடலங்கள் மிதந்துள்ளன. 

மாணவர்களின் உடல்களை கைப்பற்றிய கோட்டகுப்பம் போலீசார் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிதுன் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் (SNMB) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!
விஜய்யின் பேர கேட்டாலே நடுங்கும் ஆளும் கட்சி.. புதுவையில் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்க தயங்கும் அரசு..