தமிழகத்தை கலவர பூமியாக்க சதி தீட்டும் சமூக விரோதிகள்.. அதிரடி காட்டிய அண்ணாமலை!

Published : Oct 23, 2022, 03:39 PM IST
தமிழகத்தை கலவர பூமியாக்க சதி தீட்டும் சமூக விரோதிகள்.. அதிரடி காட்டிய அண்ணாமலை!

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சாலையில் மாருதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, காரில் இருந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு கார் வெடித்து சிதறியது. இதில் கார் இரண்டு துண்டுகளாக சிதறிய நிலையில், காரில் பயணம் செய்த ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பாஜக வரவேற்கிறது.

தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி