ரஜினி சொன்னது தவறில்லை.! தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில் ரஜினிக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலை

Published : Oct 22, 2022, 05:38 PM ISTUpdated : Oct 22, 2022, 05:41 PM IST
ரஜினி சொன்னது தவறில்லை.! தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில் ரஜினிக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலை

சுருக்கம்

ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

சென்னை, அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் ‘என் கிணற்றை காணவில்லை’ என்பது போல் இருக்கிறது.

யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. உயர் அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. தவறு செய்தவர்கள் மேல் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டு, மூன்று விஷயங்களை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். முன்னாள் சுகாதாரத் துறை ராதாகிருஷ்ணன் பேசும்போது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்று பேசினார்.

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

இதையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசியல் பார்வையில் அதிகாரிகளையும் பார்க்க ஆரம்பிப்பது சரி இல்லை. புதிய ஆதாரங்களை எதையும் இந்த ஆணையம் சொல்லவில்லை. வெறும் காரணங்களை மட்டும் சொல்லி இருக்கிறார்கள். அதிகாரி சொன்னதையும் திரித்து சொல்லி இருக்கிறார்கள். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் எந்தவித புதிய தகவலும் இல்லை.

ஆணையத்தின் அறிக்கையை உண்மையை கண்டறியும் தன்மை இல்லை. எங்களைப் பொறுத்தவரை யாராவது கையில் கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதிதான். பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் என்றால் சமூக விரோதிதான். திருமாவளவன் , சீமான், கனிமொழி, ஸ்டாலின் எல்லாம் கருத்து சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. ரஜினிகாந்த் பேசிய கருத்து அவரது பார்வையில் சரியானது தான். அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரின் கருத்தை பற்றி ஆணைய அறிக்கையில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசியதை விட ரஜினி பேசியது ஒன்றும் தவறில்லை. எடப்பாடி பழனிசாமி எந்தச் சூழ்நிலையில் டிவி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறியிருப்பார் என்று யோசிக்க வேண்டும்’ என்று பேசினார் அண்ணாமலை.

இதையும் படிங்க..தமிழ்நாடு மோசம்.! துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை - சர்ச்சையை கிளப்பிய பன்வாரிலால் புரோகித்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!