நிர்மலா தேவி... எஸ்.வி.சேகரை வெளுத்து வாங்கிய ரஜினிகாந்த்...! இதிலும் ஒரு சர்ச்சை...?

First Published Apr 24, 2018, 5:59 PM IST
Highlights
rajinikanth against talk about nirmaladevi and sv sekar


கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் விவகாரம் தான். கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு பொருளாசை மற்றும் பண ஆசை காட்டி இவர் தவறான பாதைக்கு கொண்டு சென்றதாக ஒரு ஆடியோ வெளியானது. 

முதலில் இதனை மறுத்து வந்த நிர்மலா தேவி, பின் போலீசாரிடம் தவறை ஒற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது நிர்மலா தேவியின் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கல்லூரி மாணவிகளை தவறாக அழைத்து சென்றது நிர்மலா தேவி தான் என நிரூப்பிக்கப்பட்டால், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறினார். 

அதே போல் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த 'எஸ்.வி.சேகர் குறித்து பேசுகையில், தெரிந்து பதிவிட்டிருந்தாலும், தெரியாமல் பதிவிட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

மேலும் சீருடையுடன் இருந்த காவலர்களை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் மீண்டும் அழுத்தமாக கூறினார். இவரின் இந்த கருத்துக்கு ஏற்க்கனவே பிரபலங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கன்னடம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

click me!