தொடர்ந்து புகைப்பிடிப்பதால் காது கேட்காமல் போய்விடுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Published : Jul 04, 2023, 11:21 AM IST
தொடர்ந்து புகைப்பிடிப்பதால் காது கேட்காமல் போய்விடுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

சுருக்கம்

புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான காது கேளாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

புகைப்பிடித்தல் என்பது பல்வேறு கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். ஆனால் புகைப்பிடிப்பதால் செவித்திறன் இழப்பு ஏற்படுவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் காது கேளாமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான காது கேளாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2018ம் ஆண்டில், Journal of the Association for Research in Otolaryngology ) நடத்திய ஒரு ஆய்வில், புகைபிடிக்காத நபர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் 1.69 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது. புகைபிடிப்பதில் ஒரு டோஸ்-ரெஸ்பான்ஸ் உறவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது, அதாவது ஒரு நாளைக்கு புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் புகைபிடிக்கும் அளவு மற்றும் அதிர்வெண் ஆகியவற்றுடன் காது கேளாமை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்

புகைபிடித்தல் மற்றும் காது கேளாமை இடையே இணைப்பு:

புகைபிடித்தல் மற்றும் புகை காரணமாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் காது கேளாமை அடையலாம். புகைபிடித்தல் தொண்டை மற்றும் நாசி திசுக்களை பாதிப்பதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் நோயாளிகள் காதுகளை பாதிக்கும் நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், குழந்தைகள் செயலற்ற புகை வெளிப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை. 

புகைபிடித்தல் இரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் தெரிந்த உண்மை. எனவே, காது கேளாததற்கு மற்றொரு முக்கிய காரணியாக, காக்லியாவுக்கு இரத்த ஓட்டம் குறைவதாகும். இது தான் செவித்திறனுக்குப் பொறுப்பான உணர்வு உறுப்பு ஆகும். சிகரெட்டில் உள்ள நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருட்கள், ஒலி அதிர்வுகளை மாற்றி மூளைக்கு மின் சமிக்ஞைகளை அனுப்பும் உள் காதில் உள்ள முடி செல்களை மேலும் சேதப்படுத்தும். இந்த காரணிகள் அனைத்தும் செவிவழி அமைப்பின் இயற்கையான செயல்முறையை கடுமையாக பாதிக்கலாம். இதன் விளைவாக, சிறு வயதிலேயே காது கேளாமை கொண்ட புகைப்பிடிப்பவர்களை பாதிக்கலாம்.

புகைபிடித்தல் தொடர்பான செவித்திறன் இழப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

புகைபிடிப்பதை விட்டுவிடுவது தான் இதற்கு ஒரே தீர்வும். தொடர்ந்து புகைபிடிப்பதால் ஏற்படும் காது கேளாமை மற்றும் பிற உடல்நல பாதிப்புகளின் முன்னேற்றத்தை மாற்றுவதற்கும் மெதுவாக்குவதற்கும் எந்தவொரு மருத்துவ நிபுணரும் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். புகைபிடிப்பதை நிறுத்துவது செவிப்புலன் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் காது கேளாமை அபாயத்தை 50% வரை குறைக்கலாம். உரத்த சத்தத்தை கேட்பதை தவிர்ப்பது, வழக்கமான செவிப்புலன் பரிசோதனைகளைப் பெறுவதன் மூலமும் தனது செவித்திறனைப் பாதுகாக்க முடியும். ENT (காது, மூக்கு மற்றும் தொண்டை) நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது. இதன் மூலம் காது கேளாமைக்கான சிகிச்சை விருப்பங்களையும் அத்துடன் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறமுடியும்.

கவனம்! குறைந்த கலோரி சர்க்கரைன்னு புற்றுநோயை விலை கொடுத்து வாங்காதீங்க.. எப்படி தவிர்ப்பது?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்