இறந்தவர்களின் அஸ்தி ஏன் புனித நதியில் கரைக்கப்படுகிறது தெரியுமா?

Published : Aug 30, 2024, 06:20 PM ISTUpdated : Aug 30, 2024, 06:37 PM IST
இறந்தவர்களின் அஸ்தி ஏன் புனித நதியில் கரைக்கப்படுகிறது தெரியுமா?

சுருக்கம்

இறந்தவர்களின் அஸ்தி ஏன் 3 நாட்களுக்கு பின் சாம்பலை சேகரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஏன் புனித நீரில் கரைக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்து மதத்தில், பிறப்பு முதல் இறப்பு வரை பல மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஒருவர் இறந்த பின் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த சடங்குகள் ஒவ்வொரு இன மக்களிடையே மாறுபடும். தங்கள் வழக்கத்திற்கு உரிய இறுதி சடங்குகளை செய்து பின், சடலங்கள் எரிக்கப்படுகின்றனர். பின்னர் இறந்தவர்களின் அஸ்தி (சாம்பல்) சேகரித்து கங்கை நதியில் கரைக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இறந்தவர்களின் அஸ்தி ஏன் 3 நாட்களுக்கு பின் சாம்பலை சேகரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஏன் புனித நீரில் கரைக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இவற்றின் ரகசியம் கருட புராணத்தில் உள்ளதாக போபாலைச் சேர்ந்த ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?

இதுகுறித்து பேசிய அவர் “ கருட புராணம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். இது 18 புராணங்களில் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரை பல கதைகள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குப் பிறகு சேகரிக்கப்பட்ட சாம்பல் இறந்த மூன்றாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாம் நாட்களில் புனித நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. பெரும்பாலும் 10 நாட்களுக்குள் சாம்பல் கங்கை நதியில் கரைக்கப்படும். . கங்கை தவிர, நர்மதா நதி, கோதாவரி ஆறு, கிருஷ்ணா நதி மற்றும் பிரம்மபுத்திரா போன்ற நதிகளிலும் சாம்பல் கரைக்கப்படலாம்.

பாம்பு மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?

நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது மற்றும் தகனம் செய்த பிறகு உடல் ஐந்து உறுப்புகளில் உறிஞ்சப்படுகிறது. ஆன்மா அழியாதது என்று கீதை கூறுகிறது, எனவே இறுதி சடங்குகளுக்குப் பிறகு சாம்பலை புனித நதிகளில் கரைப்பதன் மூலம் ஆத்மா சாந்தியடைகிறது என்பது ஐதீகம். இப்படிச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகில் இருந்து விடுதலை பெறுகிறான் என்று கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்