ஆசிரியர் தினம் 2024 : டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

By Ramya sFirst Published Sep 2, 2024, 11:36 AM IST
Highlights

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு சிறந்த அறிஞர், ஆசிரியர் மற்றும் புகழ்பெற்ற தத்துவவாதியும் ஆவார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962 முதல் 1967 வரை குடியரசுத் தலைவராக இருந்தபோது, ​​செப்டம்பர் 5 ஆம் தேதி அவரது பிறந்தநாளைக் கொண்டாட அனுமதிக்குமாறு அவரின் மாணவர்களும் நண்பர்களும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ராதாகிருஷ்ணன், தனது பிறந்தநாளை அந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று பரிந்துரைத்தார். அதன்படி, 1962 முதல், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 

Latest Videos

டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 அன்று திருத்தணியில் சர்வபள்ளி வீராசுவாமி மற்றும் சீதம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவர் சிவகாமி என்பவரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள் ஆவர். அதாவது 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். டாக்டர். ராதாகிருஷ்ணன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Teachers Day 2024 : செப். 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுவது ஏன்?

தனது கல்வி வாழ்க்கை முழுவதும், டாக்டர் ராதாகிருஷ்ணன் படிப்புக்கான உதவித்தொகை பெற்றார்.

வேலூரில் உள்ள வூர்ஹீஸ் கல்லூரியிலும், சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றார்.

1906 இல், அவர் தத்துவத்தில் முதுகலைப் படிப்பை முடித்து, பேராசிரியரானார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, அவர் 1931 இல் மாவீரர் பட்டம் பெற்றதால் சர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1936 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கிழக்கு மதங்கள் மற்றும் நெறிமுறைகளின் ஸ்பால்டிங் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

1946 இல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யுனெஸ்கோவிற்கு இந்திய தூதராக பணியாற்றிய அவர் மாஸ்கோவிற்கும் தூதுவராகவும் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1952ல் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், 1962ல் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். 1963 இல், அவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் மற்றும் 1975 இல் டெம்பிள்டன் பரிசு வழங்கப்பட்டது.

1931 முதல் 1936 வரை, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆந்திரா பல்கலைக்கழகத்திலும், 1939 முதல் 1948 வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக இருந்தார்.

1953 முதல் 1962 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருந்தார்.

அவர் இந்தியக் குடியரசுத் தலைவரானபோது, ​​ரூ.10,000 சம்பளத்தில் ரூ2,500 மட்டுமே ஏற்றுக்கொண்டார், மீதமுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது.

Google Warning: கூகுளில் தேட கூடாத 5 விஷயங்கள் என்னென்ன? மீறி தேடினால் சிறைதான்!

click me!