சரசரவென உயர்ந்த தங்கம் விலை... சவரன் விலையைக் கேட்டு மயக்கம் போட்டுடாதீங்க...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 11, 2021, 11:09 AM IST
சரசரவென உயர்ந்த தங்கம் விலை... சவரன் விலையைக் கேட்டு மயக்கம் போட்டுடாதீங்க...!

சுருக்கம்

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 32  ரூபாய் உயர்ந்து, ரூ.4,232-க்கு விற்பனை ஆகிறது. 

கொரோனா காலக்கட்டத்தில் தொழில் முடக்கம் நிலவியதால்,  முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விலையும் விண்ணத்தைத் தொட்டது.  பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் அதன் விலையிலும் அவ்வப்போது ஏற்ற, இறக்கங்களை காண முடிகிறது. 

இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை விண்ணை பிளக்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் வாயை பிளக்கின்றனர். 

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 32  ரூபாய் உயர்ந்து, ரூ.4,232-க்கு விற்பனை ஆகிறது. அதாவது சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ரூ.33, 912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்