கார்ப்பரேட் வாழ்க்கை:  மோசமான மனநலப் பிரச்சினை அதிகரிக்கும் அபாயம்..!!

Published : Aug 12, 2023, 12:28 PM ISTUpdated : Aug 12, 2023, 12:33 PM IST
கார்ப்பரேட் வாழ்க்கை:  மோசமான மனநலப் பிரச்சினை அதிகரிக்கும் அபாயம்..!!

சுருக்கம்

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊழியர்களுக்கு மனநலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுவதால், இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இரண்டு நிறுவன ஊழியர்களில் ஒருவருக்கு மனநலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இது சமீபத்திய ஆய்வின் கூற்று. மேலும், ஆண் ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், பெண் ஊழியர்களுக்கு ஒருவித மனநலப் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் எந்த வயதினரையும், பாலினத்தையும் பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்க. அத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், இது குறிப்பாக பெருநிறுவன ஊழியர்களின் செயல்பாட்டு உற்பத்தித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பிரச்சனை பிற்காலத்தில் பல தீவிர நோய்களாக மாறிவிடும் என்பதால் இது தொடர்பான மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க:  Night Work: இரவில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில ஆலோசனைகள் இதோ!

கார்ப்பரேட் ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள்:  
எட்டு இந்திய நகரங்கள் மற்றும் இ-காமர்ஸ், எஃப்எம்சிஜி உள்ளிட்ட 10 துறைகளில் 3,000 கார்ப்பரேட் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு 2 கார்ப்பரேட் ஊழியர்களில் ஒருவர் மோசமான மனநல அபாயத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இதன் காரணமாக கடந்த ஆண்டு 10 ஊழியர்களில் எட்டு பேர் மன உளைச்சல் காரணமாக குறைந்தது இரண்டு வாரங்களாவது வேலையைத் தவறவிட்டது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக வேலை-வாழ்க்கை சமநிலை படிப்படியாக மோசமடைந்து வருவதாக கார்ப்பரேட் ஊழியர்கள் நம்புகின்றனர்.

இதையும் படிங்க:  மனநல பிரச்சனை ஒருவருக்கு இருக்கா? அப்போ அவங்களிடம் இந்த கேள்வி கேட்காதீங்க..!!!

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்னை மிகவும் கவலையளிக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஏனெனில் அதன் விளைவு நேரடியாக பல நோய்களின் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், மக்களின் கார்ப்பரேட் வாழ்க்கையில் மனநலம் குறித்த களங்கம் இன்னும் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் ஆதரவான சூழலை உருவாக்கினால், பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் அவதிப்படும் கார்ப்பரேட் ஊழியர்களின் மன நிலையைக் கட்டுப்படுத்த உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்