Parenting Tips : பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகள் எந்த வயது வரை உங்களுடன் தூங்க வேண்டும் தெரியுமா..?

By Kalai SelviFirst Published Apr 11, 2024, 11:02 AM IST
Highlights

ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் குழந்தைகள் தனி அறையில் தூங்குவது அவசியம். எனவே,  எந்த வயதில்  குழந்தைகள் தனியாக தூங்க வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

பொற்றோர்களின் உலகம் எதுவென்றால் அது அவர்களின் பிள்ளைகள் தான். மேலும் குழந்தைகள் பிறந்தது முதல் பெற்றோர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விடுகிறார்கள். பொதுவாகவே, குழந்தைகள் பிறந்தது முதல் தங்கள் பெற்றோருடன் தூங்குவது வழக்கம். இருந்த போதிலும், பெற்றோர்கள் எந்த வயது வரை தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்க உண்டு. இதை பற்றி இப்போது இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 7 வயது வரை தங்களோடு தூங்க வைக்கலாம். எட்டு வயதில் இருந்து அவர்களை தனி அறையில் தான் படுக்க வைக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில், 7 வயது என்பது அவர்கள் மனதளவில் குழந்தைதான்..இதனால் அவர்கள் இருட்டு கண்டு பயப்படுவது மட்டுமின்றி, அழ கூட வாய்ப்பு அதிகம். அந்த சமயம், தாயின் அணைப்பு அவர்களின் பயத்தை போக்கும். ஆனால், 8 வயது என்றால் அவர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே, அவர்களைத் தனி அறையில் தூங்க வைக்கலாம். சரி..இப்போது குழந்தைகளை தனி அறையில் தூங்க கற்றுக்கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்..

இதையும் படிங்க:  Parenting Tips : வெயில் ரொம்ப அடிக்குதுனு குழந்தையை ஏசி ரூம்ல தூங்க வைக்கிங்களா..? ஜாக்கிரதை!!

இதையும் படிங்க:  Parenting Tips : சிறு குழந்தைகள் ஏன் அடிக்கடி வாயில் விரல்களை வைக்கிறார்கள் தெரியுமா..?

குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க சில டிப்ஸ்:

  • எடுத்த உடனே குழந்தைகளிடம் 'உனக்கு எட்டு வயசாச்சி, இனி நீ தனி அறையில் தான் தூங்க வேண்டும்' என்று சொன்னால் அவர்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள். அதற்கு பதிலாக அவர்களிடம் அன்பாக எடுத்து செல்லுங்கள். மேலும் அவர்களின் பயத்தை போக்க அவர்களை  ஊக்குவியுங்கள். அதுமட்டுமின்றி, அவர்களது அறையில் அவர்களுக்கென பிரத்யேக படுக்கை ஏற்பாடு செய்யுங்கள். இதனால் அங்கு தூங்குவதை அவர்கள் விரும்பலாம்.
  • சில குழந்தைகள், எவ்வளவு தான் தனி அறையை ஸ்பெஷலாக மாற்றி கொடுத்தாலும் இரவையும் இருளையும் கண்டு பயப்படுவார்கள். மேலும், அவர்கள் பெற்றோர் இல்லாமல் தூங்க மாட்டார்கள். இந்த சமயத்தில் நீங்கள் அவர்களுடன் எப்போதும் இருப்பீர்கள் என்று நம்பிக்கை அவர்களுக்கு கொடுங்கள். அவர்கள் தனியாக தூங்குவததை விரும்பாவிட்டால், தாத்தா பாட்டியுடன் தூங்க வையுங்கள். பிறகு அவர்களே தனியாக தூங்க பழகுவார்கள்.
  • மேலும் அவர்கள் இரவில் படுக்கும் முன் பயம் வராமல் இருக்க, அவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் புத்தகம் படிப்பது அல்லது இசை கேட்கும் பழக்கத்தைக் கற்று கொடுங்கள். பிறகு தானாகவே உறங்கிவிடுவார்கள். குறிப்பாக, அவர்கள் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை டிவி, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
  • அதுபோல, குழந்தைகள் தனியாக தூங்குவது, அவர்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்க வேண்டும் போன்ற விஷயங்களின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். குறிப்பாக, 'நீ உன் அறையில் தூங்கினால் உனக்கு பரிசு தருவேன்' என்று கூட சொல்லுங்கள். இப்படி அவர்களை ஊக்கப்படுத்தி, தனியாக தூங்கப் பழக்குங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!