சகுனமே சரியில்லையே இந்த விலங்கையா பார்த்தீங்க? எச்சரிக்கையா இருங்க!

By maria paniFirst Published Dec 28, 2022, 3:25 PM IST
Highlights

கனவில் சில விலங்குகளும் பறவைகளும் வருவதை அதிர்ஷ்டம், துரதிஷ்டம் என சகுன சாஸ்திரம் கூறுகிறது. என்னென்ன விலங்குகளுக்கு என்ன சகுனம் என்பதை இங்கு காணலாம். 

இந்தியாவிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் சகுன சாஸ்திரங்களில் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர்.  சகுனத்தில் சுப சகுனம், அசுப சகுனம் என இருவகையாக உள்ளது. நம் வாழ்க்கையில் தானாக நிகழும் சில அறிகுறிகளை சகுனம் என்று கூறலாம். 

நம்முடைய கனவில் குறிப்பிட்ட விலங்கு அல்லது பறவையைப் பார்ப்பது, பூனை குறுக்கே வருவது போன்ற சில நிகழ்வுகள் கெட்ட சகுனங்களைக் குறிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில விலங்குகள் மற்றும் பறவைகளை கனவில் அல்லது வெளியில் செல்லும்போது மீண்டும் மீண்டும் பார்ப்பது மிகவும் அசுப சகுனமாக கருதப்படுகிறது. 

இது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் உங்களுக்கு நடக்கப் போகிறது என்பதன் அறிகுறியாகும். இதனால் எதிர்காலத்தில் ஏதாவது கெட்டது நடக்கலாம் என்று ஜோதிடம் சொல்கிறது. உங்களுடைய கனவில் அடிக்கடி நடப்பதை சகுனங்கள் என முன்னோர் குறிப்பிடுகின்றனர். இறந்த உடலைச் சுற்றி பல காகங்களைப் பார்ப்பது மிகவும் மோசமான சகுனமாக கருதப்படுகிறது. வீட்டைச் சுற்றி பல காகங்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டால் நீங்கள் விரைவில் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்களாம். 

பயணங்களில் சகுனம் 

நாம் பயணம் செய்யும்போது நாய் எதிரில் வரலாம். வலமிருந்து இடப்புறத்தில் செல்வதும் நல்லதாக இருந்தாலும் அந்த நாய் நம் மீது தாவி ஒட்டிக் கொள்வதும், கால்கள் மீது ஏறுவதும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. 

பச்சோந்திகள்

பாதையில் அல்லது வீட்டிற்கு அருகில் பச்சோந்திகள் அடிக்கடி தோன்றினால், அது உங்கள் வேலையில் தடைகள் இருப்பதற்கான அறிகுறியாகும். உங்கள் தற்போதைய வேலைகளில் சில தடைகள் வரலாம்  அல்லது சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

 

கழுகு 

கழுகுகளை அடிக்கடி பார்ப்பதும் ஒரு அசுப சகுனமாக கருதப்படுகிறது. ஞான நூல்களின்படி, இறந்த உறவினர்களுடன் கழுகின் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. வெளியே போகும்போது கழுகுகளை அடிக்கடி பார்த்தால், உங்கள் முன்னோரின் ஆவி அலைந்து திரிகிறது என்று அர்த்தம். அவற்றின் அமைதிக்காக நீங்கள் பூஜை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க; ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்... ஆளி விதையில் கிடைக்கும் தீர்வு!

பாம்பு 

வெறிச்சோடிய இடத்தில் அடிக்கடி  பாம்புகள் தோன்றினால், விரைவில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு அல்லது கெட்டது நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலை செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். கனவில் பாம்புகளை கூட்டமாகப் பார்ப்பது ஒரு சாதகமற்ற அறிகுறியாகக் கருதப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்று அர்த்தம்.

பன்றி

ஜோதிடத்தின்படி, வீட்டை விட்டு வெளியேறும்போது பன்றி சேற்றில் நனைவதைக் கண்டால், அது நல்ல அறிகுறியாகும். ஆனால் சேறு காய்ந்திருந்தால் அது அசுப சகுனமாகும். 

கழுதை

சாஸ்திரங்களின்படி, வீட்டை விட்டு வெளியேறும் போது உங்களுக்குப் பின்னால் அல்லது முன்னால் கழுதை இருந்தால், அது ஒரு அசுப சகுனமாக கருதப்படுகிறது. ஏதாவது வேலைக்குப் புறப்படும்போது கழுதையைக் கண்டால் வேலை முடியுமா என்பதே சந்தேகம்தான். எக்காரியம் நிறைவேற செல்கிறோமோ அதில் நல்ல முடிவை எதிர்பார்க்கமுடியாது. 

இதையும் படிங்க; முக்கியமான நேரத்துல கூட மூட்டு வலியா? உடனடியாக குறைக்க எளிய தீர்வுகள் இதோ!

click me!