மின்சார கட்டணத்தை குறைக்க இரவில் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்வது சரியா? தெரிஞ்சுக்க இதை படிங்க..

Published : Sep 13, 2023, 07:39 AM ISTUpdated : Sep 13, 2023, 08:00 AM IST
மின்சார கட்டணத்தை குறைக்க இரவில் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்வது சரியா? தெரிஞ்சுக்க இதை படிங்க..

சுருக்கம்

ஃப்ரிட்ஜ் என்பது கணிசமான அளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆற்றல் சேமிப்பு என்பது பணத்தைச் சேமிப்பதற்கும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் முறையாகும். நமது கிரகம் குறிப்பிட்ட அளவிலான ஆற்றல் விநியோகங்களைக் கொண்டிருப்பதால், நம்மால் இயன்ற ஆற்றலைச் செயலில் சேமித்து வைப்பது தனிநபர்களுக்கும் நமது பெரிய ஆற்றல் அமைப்புகளுக்கும் சாதகமானதாக கருதப்படுகிறது.

நீங்கள் அறையை விட்டு வெளியே வரும்போது விளக்கை அணைப்பது, சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை அணைத்து வைப்பது, ஏசி மற்றும் ரூம் ஹீட்டர் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது போன்றவை மின்சாரத்தைச் சேமிப்பதற்கான பொதுவான வழிகளாகும். ஆனால் மின்சாரத்தை சேமிக்க எங்கள் ஃப்ரிட்ஜை இரவில் அல்லது நீண்ட காலத்திற்கு அணைத்து வைப்பது சரியா என்பதை விவாதிக்க வேண்டியது அவசியம் உள்ளது.

 

இந்த மாதிரி 'டூத் பிரஷ்' வாங்குங்க.. உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்காது..!!

ஃப்ரிட்ஜ் என்பது கணிசமான அளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைப்பதால் நன்மைகளை விட தீமைகள் அதிகமாக உள்ளது. ஆம்.. உணவுப் பொருட்களையும் பானங்களையும் எப்போதும் புதியதாக வைத்திருப்பதே ஃப்ரிட்ஜின் வேலை. எனவே உங்கள் ஃப்ரிட்ஜை  நீண்ட நேரம் ஆஃப் செய்து வைத்தால் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பொருட்கள் கெட்டுவிடும்.

ப்ரிட்ஜை  அணைக்கும்போது, அது 2-3 மணி நேரம் மட்டுமே உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். ஒரே இரவில் 5-6 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியை அணைத்து வைக்க நினைத்தால், குளிர்ச்சி இல்லாததால் உள்ளே இருக்கும் பொருட்கள் கெட்டுவிடும்.

பெற்றோர்களே ப்ளீஸ் நோட்.. கல்வி, தேர்வுகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்..

குளிர்சாதனப் பெட்டிகளில் அதிக வெப்பநிலை இருப்பதால் பூஞ்சைகள் வளரக்கூடும், மேலும் பூஞ்சை கலந்த உணவை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  குளிர்சாதன பெட்டியை அணைத்தவுடன், அதன் உள்ளே வெப்பநிலை உயரத் தொடங்குகிறது. சிறிது நேரம் கழித்து நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை மீண்டும் ஆன் செய்தால், கம்ப்ரசர் குளிர்சாதனப்பெட்டியை அதே வெப்பநிலையில் மீண்டும் குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும், மேலும் அதற்கு இன்னும் அதிக மின்சாரம் செலவழிக்கும். எனவே நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை அணைத்து வைப்பதால் பொருளாதார ரீதியில் பலன் கிடைக்காது.

நவீன குளிர்சாதனப்பெட்டிகள் ஒரு தெர்மோஸ்டாட் மற்றும் ஒரு ஆட்டோ-கட்-ஆஃப் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளன, இதனால் வெப்பநிலையை அடைந்தவுடன் கம்ப்ரசர் தானாகவே அணைக்கப்படும். இது குளிர்சாதன பெட்டியை குளிர்ச்சியாகவும், மின்சாரத்தை சேமிக்கவும் உதவும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்