ரூ.35 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கப்பட்ட சிறுமி! சுமார் 100 முறை கற்பழிப்பு! விதவை தாயும் கொடுராமாக அடித்துக் கொலை!?

First Published Apr 21, 2018, 6:40 PM IST
Highlights
surat rape case victim mom were sold for rs 35000


சூரத்தில் கடந்த வாரம் 86 காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேஸ்தான் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் சடலம் கிடந்ததை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 5 மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் இருந்துள்ளது மேலும், அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 நாட்கள் ஒரே இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மரக் கட்டைகளால் அடித்து சிறுமியின் அந்தரங்க உறுப்பில் தாக்கியிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்து ஒன்று முதல் 7 நாட்களுக்கு முன்னதாக நடந்தவை என்று அறிக்கையில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சூரத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியே வந்தன. சிறுமியின் தந்தையை இழந்துவிட்டு தாயுடன் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் எல்லை பகுதியான கங்காபூரில் வசித்து வந்தது தெரியவந்தது. 

குழந்தையுடன் தாய் வருமானத்துக்கு அவதிப்படுவதை அறிந்த ஒரு நபர் அந்த தாயிடம் வந்து ஒப்பந்த அடிப்படையில் சூரத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று கூறி அந்த பெண்ணிடம் ரூ.35 ஆயிரத்தை வழங்கினார். இதை நம்பிய அவரும் குழந்தையுடன் அந்த ஆசாமியின் இடத்துக்கு சென்றார்.  அப்போது ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த ஆசாமி. ஒப்பந்த பணிக்கு என்று அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடுமை செய்தது குறித்து அந்த பெண் சண்டையிட்டால் குழந்தையை கொன்றுவிடுவதாக அந்த காமகன் மிரட்டியுள்ளார். 

தாயின் வாழ்க்கையை சீரழித்தது மட்டுமில்லாமல் அவரது மகள் 9 வயது சிறுமியையும் அவரது உறவினருடன் சேர்ந்து பலாத்காரம் செய்தார். "என் மகளையாவது விட்டு விடு, நீங்கள் கொடுத்த பணத்தை கொடுத்துவிடுகிறேன்" என்று கெஞ்சியும் அந்த சிறுமியை விடவில்லை. 

4 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் 86 முறை மரக்கட்டையால் அந்த சிறுமியை அடித்து கொன்றுவிட்டு உடலை கிரிக்கெட் மைதானத்தில் வீசியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியின் தாயை காணவில்லை. மேலும் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது சிறுமியின் தாய் தானா என்பதை அறிந்து கொள்ள மரபணு சோதனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். 

click me!