எம்.பிக்களின் எண்ணிக்கை உயரும் : புதிய பாராளுமன்றத்தில் மோடியின் முதல் உரையில் இதை கவனிச்சீங்களா?

By Ramya sFirst Published May 28, 2023, 4:29 PM IST
Highlights

புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் கட்டுமானம் 2019 இல் தொடங்கியது. ₹1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் மூன்று மாடிகள் மற்றும் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க புனிதமான "செங்கோலை" சபாநாயகர் அருகே நிறுவினார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க : அன்று 20 வயது.. இன்று 97! இவருக்கும், சோழ ஆட்சியின் செங்கோலுக்கும் இப்படியொரு சம்பந்தமா.

மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். மோடி தனது முதல் உரையில், இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று கூறினார். புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள், புதிய உத்வேகத்துடன், ஜனநாயகத்திற்கு புதிய திசையை வழங்க முயற்சிப்பார்கள்" என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் உரை

"இந்தியாவிற்கு இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். புதிய பாராளுமன்றம், புதிய இந்தியாவின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பாகும். இது ஜனநாயகத்தின் கோவில்."

"இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு ஊடகம். இந்திய ஜனநாயகத்தின் இந்த பொன்னான தருணத்திற்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன்."

"இந்த புதிய பாராளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும்."

 

"இந்தியா முன்னேறும் போது, உலகம் முன்னோக்கி நகரும். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம், இந்தியாவின் வளர்ச்சியுடன், உலகின் வளர்ச்சிக்கும் அழைப்பு விடுக்கும்."

"புனித 'செங்கோல்' இன்று பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தில், 'செங்கோல்' நீதி, நேர்மை மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது."

"இந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம், செங்கோல் நம் அனைவரையும் ஊக்குவிக்கும்."

"இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய்,"

"நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு நமது தீர்மானம். இந்த உத்வேகத்தின் சிறந்த பிரதிநிதி, இந்த தீர்மானம், நமது பாராளுமன்றம்."

"பல ஆண்டுகால அந்நிய ஆட்சி நமது பெருமையை நம்மிடமிருந்து திருடிவிட்டது. இன்று இந்தியா அந்தக் காலனித்துவ மனநிலையை விட்டுச் சென்றுவிட்டது."

"பழைய பாராளுமன்றத்தில் தொழில்நுட்பம் மற்றும் அமர்வில் சிக்கல்கள் இருந்தன. இந்த புதிய பாராளுமன்றம் காலத்தின் தேவையாக இருந்தது. இந்த புதிய பாராளுமன்றம் 60000 பேருக்கு வேலை வழங்கியுள்ளது."

"அடிமைத்தனத்திற்குப் பிறகு, பலவற்றை இழந்து புதிய பயணத்தைத் தொடங்கியது நமது இந்தியா. அந்தப் பயணம் பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, பல சவால்களைக் கடந்து, சுதந்திரத்தின் பொற்காலத்தில் நுழைந்துள்ளது."

"புதிய பாராளுமன்றத்தின் தேவை இருந்தது. இனிவரும் காலங்களில் நாற்காலிகள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதனால்தான் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக இருந்தது."

"நாம் தேசத்தின் முதல் நோக்கத்துடன் முன்னேற வேண்டும்."

"மக்களுக்காக 4 கோடி வீடுகள் & 11 கோடி கழிவறைகள் கட்டுவது, 4 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைத்தது, 50,000 அமிர்த சரோவர் கட்டுவது, 30,000 புதிய பஞ்சாயத்து பவன்களை உருவாக்குவது போன்றவற்றில் நான் மிகுந்த திருப்தி அடைகிறேன்.

"இந்த பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள், புதிய உத்வேகத்துடன், ஜனநாயகத்திற்குப் புதிய திசையை வழங்க முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்."

இதையும் படிங்க : தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்: காங்கிரஸ் விமர்சனம்

click me!