மகளின் திருமண நாளில் வெட்டிக்கொல்லப்பட்ட தந்தை.. முன்னாள் காதலர் செய்த வெறிச்செயல்..

By Ramya sFirst Published Jun 28, 2023, 11:18 AM IST
Highlights

கேரளாவில் 63 வயது முதியவர் ஒருவர் தனது மகளின் திருமண நாளில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரத்தில் இன்று அதிகாலையில் 63 வயது முதியவர் ஒருவர் தனது மகளின் திருமண நாளில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசேரிகோணம், வர்க்கலா பகுதியைச் சேர்ந்த ராஜூ (63) என்பவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜிஷ்ணு மற்றும் நண்பர்கள் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தனர். ராஜுவின் மகள் ஸ்ரீலட்சுமியும், குற்றம் சாட்டப்பட்ட ஜிஷ்ணுவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீலட்சுமியை திருமண செய்து வைக்கக் கோரி ஜிஷ்ணு கேட்டதற்கு, பெண்ணின் குடும்பத்தினர் அவரை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீலட்சுமிக்கு வேறொரு மணமகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி ராஜுவின் மகளின் திருமணம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முன்னதாக, குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரவு விருந்து அளித்தனர். இந்த நிலையில் ஜிஷ்ணு, அவரது சகோதரர் மற்றும் இரண்டு நண்பர்கள்-மனு மற்றும் ஷ்யாம்-நள்ளிரவில் குடும்பத்துடன் சண்டையிட்டுள்ளனர்..

ஜூலை 24-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்.. எந்தெந்த மாநிலங்களில்? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..

இந்த வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ராஜுவை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சத்தம் கேட்டு ராஜுவின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தபோது, நான்கு பேரும் வீட்டை விட்டு தப்பியோடினர்.

நள்ளிரவு 1 மணியளவில் இந்த குற்றச் செயல் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கல்லம்பலம் பொலிஸார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். நால்வரும் அங்கிருந்து தப்பியோடிய போது, அப்பகுதி மக்கள் அவர்களை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

முன்னாள் வெளிநாட்டவரான ராஜு, 25 வருடங்கள் வெளிநாட்டில் இருந்து தனது வேலையை விட்டுவிட்டு கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திரும்பி வந்ததும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.

ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்.. கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய 7 மருத்துவ மாணவிகள்!

click me!