அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் மேல் படிப்புக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். புது இடம், புது கலாச்சாரத்தால் கவரப்பட்ட அப்பெண்ணுக்கு தலைநகர் டெல்லியில் மூன்று இளைஞர்கள் அறிமுகமாகினர்.
கனிவான பேச்சு, உபசரிப்பால் கவரப்பட்ட அமெரிக்க இளம்பெண் அந்த மூன்று இளைஞர்களிடமும் வெகு விரைவிலேயே நண்பராகி உள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இவர்களிடம் இருந்த நட்பு அதிகமாகி, உணவகம் வரை நீண்டது.
இந்தச் சூழலில் ஓட்டலில், பார்ட்டி தருகிறோம் என்று அந்த பெண்ணுக்கு மூன்று இளைஞர்களும் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்ணும் அவர்களுடன் ஓட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அப்போது பொருட்கள் வாங்கச் செல்வதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் வெளியே சென்றுவிட்டனர். அப்போது அறையில் அரியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அப்பெண்ணும் மட்டுமே தனியாக இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் அமெரிக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பலாத்காரம் செய்த அந்நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.